பரமேஸ்வரமங்களம் ஊராட்சியில்  மாவட்ட கவுன்சிலர்  பெ.சுந்தரம்மாள் பொங்கல் தொகுப்பு வழங்கினார்.


ராணிப்பேட்டை மாவட்டம்   நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட சயனபுரம்,பரமேஸ்வரமங்களம், செல்வமந்தை, மேல் களத்தூர்  ஊராட்சி நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ் ஜி சி பெருமாள் தலைமையில் நடைபெற்றது.ஊராட்சி மன்றத் தலைவர்கள்  எ ஆறுமுகம், வி.சசிகலா வெங்கடேசன், என் .சங்கர், வங்கி செயலாளர்கள் குணசேகரன்,அன்பு,ரவிச்சந்திரன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக  மாவட்ட கவுன்சிலர்  பெ.சுந்தரம்மாள்  கலந்து கொண்டு நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் ரூபாய்  3000 பொங்கல் பரிசு மற்றும் பச்சரிசி சர்க்கரை உடன் விலையில்லா வேட்டி சேலை யுடன் முழு கரும்பு வழங்கினார். இதில்  ஒன்றிய  துணைச் செயலாளர்கள்  எ .சீனிவாசன்,எம் தமீன் அன்சாரி,மாவட்ட பிரதிநிதி,கே .சுரேஷ்
கிளை நிர்வாகிகள்  சேட்டு,  எல்லப்பன், .மணிகண்டன், .மணி, பார்த்திபன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

RANIPET - NEMLY

Comments

Popular posts from this blog