மு அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம். ராணிப்பேட்டை மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .கூட்டத்தில் நெமிலி திமுக மத்திய ஒன்றிய செயலாளர் லயன்ஸ் எஸ் ஜி சி பெருமாள் தலைமையில் ஒன்றிய அவைத்தலைவர் நரசிம்மன் ,ஒன்றிய துணைச் செயலாளர்கள் சீனிவாசன், வழக்கறிஞர் தமின் அன்சாரி ,சாவித்திரி சுந்தரவடிவேலு ,பொருளாளர் எஸ் ஆர் பி ரமேஷ் , மாவட்ட பிரதிநிதிகள் சுரேஷ் தனசேகரன் தசரதன் சண்முகம் உட்பட முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Posts
- Get link
- X
- Other Apps
அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ சொட்டு மருந்து சேவை வழங்கும் விழா. அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ சொட்டு மருந்து சேவை வழங்கும் விழாவில் அரக்கோணம் ரோட்டரி சங்கத்தின் போலியோ பிளல் இயக்குனர் Rtn. ஆர். வெங்கட்ரமணன், ரோட்டரி மாவட்டம் 3231 முன்னாள் மாவட்ட துணை ஆளுநர் கே. பி. கே. பிரபாகரன் தமிழ் படைப்பாளர்கள் சங்க தலைவர் Rtn. சீ. மோகன் ஆகியோர் இணைந்து ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்கள்.
- Get link
- X
- Other Apps
அதிமுக மாவட்ட செயலாளர்பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ பி எஸ் லோகநாதன் வட மாம்பாக்கம் ஊராட்சியில் அதிமுக பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் அப்போது மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி தலைமையில் ஒன்றிய மாணவரணி செயலாளர் டி எம் . சத்யநாராயணன் ஏற்பாட்டில் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஜி.மோகன் ,மற்றும் முக்கிய நிர்வாகிகள் கிளை செயலாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- Get link
- X
- Other Apps
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் A.P.S.லோகநாதனுக்கு மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் M.P.சோமசுந்தரம் வாழ்ந்தது . ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக A.P.S.லோகநாதனை அதிமுக பொதுச்செயலாளர் மு.தமிழக முதல்வர் மு.எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித் தமிழர் டாக்டர் . எடப்பாடி பழனிச்சாமி நியமித்ததை வரவேற்கும் வகையில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் M.P.சோமசுந்தரம் அதிமுக பொதுச்செயலாளர் டாக்டர். எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்தும் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் A.P.S.லோகநாதனுக்கு வாழ்ந்தது தெரிவித்து அரக்கோணம் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி வருகிறார்.
- Get link
- X
- Other Apps
வட்டாட்சியர் பன்னீர் செல்வத்திற்கு லயன்ஸ் எஸ் ஜி சி பெருமாள் வாழ்த்து! ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி புதிய வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள பன்னீர்செல்வம் அவர்களை நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் சமூக ஆர்வலர் லயன்ஸ் எஸ் ஜி சி பெருமாள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார்
- Get link
- X
- Other Apps
அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜ் நேத்ரா மல்டி ஸ்பெஷாலிட்டி 24-மணி நேர மருத்துவமனையின் மற்றுமொரு முக்கிய பிரிவாக,V2-ஸ்கேன்ஸ்&டாயாக்னடிஸ் சென்டர் திறப்பு திறந்து வைத்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் புகழ் பெற்ற மருத்துவமனை யான நேத்ரா மல்டி ஸ்பெஷாலிட்டி 24-மணி நேர மருத்துவமனையின் மற்றுமொரு முக்கிய பிரிவாக,V2-ஸ்கேன்ஸ்&டாயாக்னடிஸ் சென்டர் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்புலராக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜ் கலந்து கொண்டு திறந்து வைத்தார். முன்னதாக மருத்துவ மனையின் இயக்குநர்கள் மருத்துவர் உமாபதி ,நேத்ரா திருமலை ,.விமலா திருமலை ஆகியோர், நிகழ்ச்சிக்கு வருகை தந்த முக்கிய பிரமுகர்களை வரவேற்றனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியன், வணிகர் சங்கங்களின் மாநில பேரவைத் தலைவர் கே.எம்.தேவராஜ், ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் மேஜர் டோனர் பி.இளங்கோ, ரோட்டரி சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் மணி,சந்துரு, தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் சீ மோகன், செயலாளர் க...