கட்டுமானம் மற்றம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ 5000 வழங்க வேண்டும் மாநில தலைவர் டாக்டர் குருவை குமார் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு சங்கமம் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் டாக்டர் குருவை குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக அரசு பொங்கல் பரிசு 5000 வழங்க வேண்டும்,ஓய்வூதியம் உயர்த்த வேண்டும் என பேசினார் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் ஓய்வூதியம் மாதம் 3000 ரூபாயாக உயர்த்த வேண்டும்,.கட்டுமானம் வாரியத்தின் மூலமாக வழங்கப்பாடு வீடு கட்டும் திட்டம் தொழிவுடைந்து உள்ளது துரிதமாக செயல்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும் தமிழ்நாடு கட்டுமானம் தொழிலாளர்கள் வாரியத்தின் மூலமாக தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் மூலமாக நடத்தப்பட்ட கட்டுமானம் தொழிலாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்ந்து நடத்த வேண்டும். தமிழ்நாடு கட்டு...
Posts
Showing posts from December, 2025
- Get link
- X
- Other Apps
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அரக்கோணம் நகர அனைத்து வணிகர் சங்கம் சார்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில செயல் தலைவர் கே எம் தேவராஜ் இணைச் செயலாளர் எம் பி சோமசுந்தரம் இடம் 2026 ஆம் ஆண்டிற்கான காலண்டர் வழங்கிய போது எடுத்த படம். அப்போது பொருளாளர் கே எம் பி ஜனார்த்தனன்,முருகன் பார்மசி ஆர்.வெங்கட்ரமணன்,,சீனு,கெஜபதி , மோகன் உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
- Get link
- X
- Other Apps
சர்வதேச இந்திய கிறிஸ்தவ திருச்சபை சினாட் பேராலயத்தில் பிரதம பேராயர் டாக்டர் ஐசக் அய்யா ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வின்டர் பேட்டையில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சர்வதேச இந்திய கிறிஸ்தவ திருச்சபை சினாட் பேராலயத்தில் பிரதம பேராயர் டாக்டர் ஐசக் அய்யா தலைமையில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .காலை ஆலய வளாகத்தில் சிறப்பு பிரார்த்தனை தொடர்ந்து கேக் வெட்டி அனைவருக்கும் பிரதம பேராயர் டாக்டர் ஐசக் அய்யா வாழ்த்து தெரிவித்தார்.தொடர்ந்து நற்செய்தி வழங்கினார் .அச்செய்தியில் 20 25 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நன்னாளில் உலக மக்கள் அனைவருக்கும் சர்வதேச இந்திய கிறிஸ்தவ திருச்சபை சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் மத்தியில் அன்பு பெருகி ஜாதி மதம், பேதமின்றி அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என இன் நன்னாளில் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். மேலும் சர்வதேச இந்...
- Get link
- X
- Other Apps
RANIPET 24.12.2025 டாக்டர் எம்ஜிஆர் படத்திற்கு நகர செயலாளர் ஜெ பி பழனி மலர் தூவி மரியாதை அரக்கோணம் சுவால்பேட்டை பிள்ளையார் கோவில் அருகே ஓ பி எஸ் அணி தொண்டர்கள் மீட்புக் குழு சார்பில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஜெ பி பழனி கலந்து கொண்டு எம் ஜி ஆர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார் இதில் மாவட்ட பிரதிநிதி ஜிம் சாத்தீஸ்,அவைத்தலைவர் ரவிச்சந்திரன்,முன்னாள் கவுன்சிலர் ஐயப்பன்,குமார்,வழக்கறிஞர் பாக்கியா, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். .
- Get link
- X
- Other Apps
RANIPET - 24.12.2025 பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவிமலர் தூவி மரியாதை . ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அரக்கோணம் இரட்டைக் கண் தரை பாலம் அருகில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதி ஊர்வலம் நகரச் செயலாளர் பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்றது.இதில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி கலந்து கொண்டு எம் ஜி ஆர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலம் காந்தி சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் வரை சென்றது. அதை தொடர்ந்து அதிமுகவினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த ஊர்வலத்தில் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
- Get link
- X
- Other Apps
RANIPET 24.12.2025 நெமிலி தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஒன்றிய சேர்மன் வடிவேலு தலைமையில் ஒன்றிய அரசு 100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கியது கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கவுன்சிலர் சுந்தராம்பாள் பெருமாள் ,ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன், மணிவண்ணன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெமிலி நகர செயலாளர் ஜனார்த்தனன் அனைவரையும் வரவேற்றார்,ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாஸ்கர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சில மாற்றங்களை செய்தும், காந்தி பெயரை நீக்கி, இந்தியில் பெயர் வைத்தும் மத்திய அரசு மசோதாவை நிறைவேற்றியது. மேலும் இந்த திட்டத்திற்கு விபிஜிராம்ஜி என்று ...
- Get link
- X
- Other Apps
RANIPET - 24.12.2025 நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ் ஜி சி பெருமாள் கபடிவீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பல்லாவரம் கிராமத்தில் புத்தர் பெண்கள் கபடி குழு ஆறாம் ஆண்டு கபடி போட்டி துவக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ் ஜி சி பெருமாள் கலந்து கொண்டு தொடர்ந்து கபடி போட்டியில் சாதனை புரிந்து வரும் வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி அருணாச்சலம் கிராம பிரமுகர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- Get link
- X
- Other Apps
RANIPET - 24.12.2025 பாரத ரத்தன டாக்டர் எம் ஜி ஆர் 38 ஆம் நினைவு நாள் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை பிள்ளையார் கோவில் அருகே அ இ அ தி மு சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் பாரத ரத்தன டாக்டர் எம் ஜி ஆர் 38 ஆம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.இதில் மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் எம் பி சோமசுந்தரம் கலந்து டாக்டர் எம் ஜி ஆர் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார் .இதில் நகர அண்ணா தொழிற்சங்கம் தலைவர் சரவணன் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- Get link
- X
- Other Apps
THENI -24.12.2025 அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு . தேனி மாவட்டத்திலிருந்து பணிக்காக பயணித்த நான்காவது பட்டாலியன், தக்கோலம் தலைமையகத்தைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு (NDRF) வீரர்கள், குழு இன்ஸ்பெக்டர் அர்ஜுன் ராஜ்புத் அவர்களின் தலைமையில் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஒரு ஆட்டோ விபத்தில் சிக்கி கவிழ்ந்தது கண்டனர். விபத்தில் சிக்கிய ஆட்டோவில் பயணித்த முதியவர் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்த நிலையில்,கண்ட NDRF வீரர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காயமடைந்த முதியவருக்கு NDRF வீரர்கள் துரிதமாக முதலுதவி அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினார்கள் . பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரின் இந்த மனிதாபிமான மற்றும் துரிதமான சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- Get link
- X
- Other Apps
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் சாதனை செம்மல் அண்ணன் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலில் பசுமை செம்மல் அண்ணன் R. வினோத் காந்தி மாநில சுற்று சூழல் அணி துணைச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நெமிலி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜாகீர் தண்டலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கண்டிகை கிராமத்தில் பூத் எண்- 232 ல் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி 23.12.2025 யில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் S. மணிவண்ணன்,நெமிலி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் அவர்களின் தலைமையில் அவைத்தலைவர் S. பொன்னுரங்கம் துணைச் செயலாளர் சித்ரா மனோகரன் C சம்பத்,மாவட்ட பிரதிநிதி KB சம்பத் கிளை செயலாளர் சிவகுமார் வெங்கடேசன் சூர்யா பார்த்திபன் கிளை நிர்வாகிகள் இளைஞரணி தொண்டர்கள் மற்றும் BLA2, BLC, BDA கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்..
- Get link
- X
- Other Apps
அரக்கோணம் பழனி பேட்டை வார்டு எண் -25 ல் உள்ள ரயில்வே இரட்டைக்கண் வாராவதி சுரங்க தலைப்பால மேற்பகுதியில் கூடுதலாக இரண்டு தண்டவாளம் அமைப்பதற்காக சுரங்க தலைப்பால பணிகள் நடைபெற்று வருகிறது அப்பகுதியில் இன்று காலை ரெடிமேட் சிமெண்ட் பிளாக் கொண்டுவரப்பட்டது.இந்த சிமெண்ட் பிளாக் பொருத்தும் பணிகளை நகரக் கழக அவைத் தலைவர் நகர மன்ற திமுக குழு தலைவர் திரு.துரை சீனிவாசன் MC, அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் திரு.அசோகன், நகரத் துணைச் செயலாளர் ப.நந்தாதேவி MC, ரயில்வே அதிகாரிகள் மேற்பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உடன்... S.மணி மு.து.செயலாளர், A.அப்துல் காதர், ABM.சரவணன், நாகேஸ்வர ராவ் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்
- Get link
- X
- Other Apps
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் சாதனை செம்மல் அண்ணன் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலில் பசுமை செம்மல் அண்ணன் R. வினோத் காந்தி மாநில சுற்று சூழல் அணி துணைச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட அரிகலபாடி ஊராட்சி பலையகார் கண்டிகை பூத் எண்- 201 ல் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் மற்றும் கழக சாதனைகளையும் துண்டு பிரசுரமாக செய்யப்பட்டது 23.12.2025 யில் நடைபெற்றது இதில் S.G.C.பெருமாள்M.A.,B.ed., நெமிலி மத்திய ஒன்றிய கழக செயலாளர் அவர்களின் தலைமையில் அவைத்தலைவர் பா.செ.நரசிம்மன் துணைச் செயலாளர் M.தமின்அன்சாரி வழக்கறிஞர் A.ஜானகிராமன் மாவட்ட பிரதிநிதி K.சுரேஷ் கிளை நிர்வாகிகள் M.முனிராஜ் S.கார்த்திக் E.ராமமூர்த்தி L.தீனதயாளன் S.மகேந்திரன் J.குமார் மற்றும் BLA2, BLC, BDA கழக முன்னோடிகள் கலந்து...
- Get link
- X
- Other Apps
ராணிப்பேட்டை மாவட்ட சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் சுதந்திரப் போராட்ட வீரர் முன்னாள் அமைச்சர் அமரர் கக்கன் ஐயா நினைவு தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் அகில இந்திய தேசிய காங்கிரஸ் ஒன்றிய தலைவரும் ,காவேரிப்பாக்கம் முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் பிரியங்கா காந்தி சங்கட்டன் அகில இந்திய தேசிய துணைத் தலைவருமான எஸ் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம் கலந்து கொண்டு . சுதந்திரப் போராட்ட வீரர் முன்னாள் அமைச்சர் அமரர் கக்கன் ஐயா படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.முன்னதாக அன்வர்திகான் பேட்டை பகுதியில் உதயகுமார் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் அப்போது ஓ பி சி நகர தலைவர் டி மகேஸ்வரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.